இடுகைகள்

பார்ப்பனியம்

பார்ப்பனியம் என்கிற சொல்லை பள்ளி சுவரில் எழுதப்பட்ட ஒரு வாசகம் வழியாக முதன் முறையாக அறிந்தேன். படமெடுத்து சீறும் பாம்பின் கோட்டோவியத்துடன் ‘பார்ப்பனியப் பாம்பு’ என எழுதப்பட்ட வெறுப்பு வாசகம் அது. அந்நிய நாட்டு சதியின் விளைவாக உலகத்தினை அழிக்க உருவாக்கப்பட்ட  பரவிக் கொல்லும் விஷச் செடியின் விதையாக இருக்கும் என நினைத்திருந்தேன். வெகுநாட்களுக்குப் பின்தான் அது ஒரு குறிப்பிட்ட வகுப்பினை சேர்ந்தவர்களின் அதிகாரத்தினை சுட்டும் பதிலிச் சொல் என அறிந்து கொண்டேன்.  பெரும்பாலும் ஏழை மாணவர்கள் படிக்கும், மதுரை லேபர் உயர்நிலைப் பள்ளியின் வெளிப்புற சுவரில் அந்த வாசகம் எழுதப்பட்டிருந்தது.  மதுரா கோட்ஸ் தொழிலாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்காக கட்டப்பட்ட பள்ளி அது. மதுரை ரயில் நிலையத்திற்கு கிழக்குபுற தண்டவாளத்திற்கு அருகில் உள்ளது அந்தப் பள்ளி. தண்டவாளத்திற்க்கு நேர் மேற்கே மறுபுறம், பெரும்பாலும் பார்ப்பனர்களும்,  பிற உயர் வகுப்பினை சேர்ந்தவர்களும் படிக்கும் விகாசா பள்ளி. இரண்டு பள்ளிகளுக்கும் மதுரை வட்டார கலாச்சார பரிமாற்ற நிகழ்வுகளில், பேச்சு, விளையாட்டுப் புதிர் போட்டிகளில் பங்கு பெற வேறு வேறு சூழலில்

பொன்னியின் செல்வன் பாகம் 1

படம்
  பொன்னியின் செல்வன் தமிழ் வாசகர்களின் கூட்டு நனவிலியில் பெரும் செல்வாக்கு கொண்ட நாவல். அருண்மொழி வர்மன், வந்தியத்தேவன், நந்தினி, ஆதித்த கரிகாலன், பூங்குழலி, பெரிய பழுவேட்டரையர் போன்ற வலுவான பாத்திரங்களை கொண்டது. பூங்குழலி, வந்தியத்தேவனின் விடுதலையுணர்வும், நந்தினி, பெரிய பழுவேட்டரையரின் கலகத்தன்மையும், குந்தவை, அருண்மொழி வர்மரின் மதிநுட்பமும், ஊமை ராணியின் மாயத்தன்மையும் என வெவ்வேறு கால கட்ட வாசிப்பில் வேறு வேறு காரணங்களால் மனதிற்கு அணுக்கமாகும் தன்மை கொண்டவைகள். மேடை நாடகம், திரைப்படம் போன்ற பல வடிவங்களில் எடுத்தாளத்தக்க  நாடகீய  தருணங்களால் நிறைந்தது.  பொன்னியின் செல்வன் நாவலைப் பற்றி முதன் முதலாக கேள்விப்பட்டது, எனது நண்பன் காமாட்சி ராஜா மூலம். ஒருவனின் வலது கை மற்றவன் தோளிலும்,  மற்றவனின் இடது கை இவன் தோளிலும் கோர்த்தபடி சாலையில் சாவதானமாக நடக்கும் இணை சிறுவர்களைப் பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்ட நண்பர்கள் நாங்கள். அவனும் அவன் மூன்று அக்காக்களும் மதுரை பெத்தானியபுரத்திலுள்ள ஒரு வாடகை புத்தக்கடையிலிருந்து எடுத்து பொன்னியி்ன் செல்வனை வாசித்தார்கள். முற்றத்து உரலில் மாவை அரைத்துக்

எண்பதுகளின் தமிழ் சினிமா - திரைப்படங்களின் ஊடாக தமிழ் சமூக வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம்

படம்
ஒரு சினிமா படைப்பின் முதன்மை நோக்கம், பார்வையாளர் திரளை திரையரங்குகளுக்கு வரவழைப்பதுதான். மூன்று மணிநேர திரைக்காட்சியில் மயக்கப்பட்ட அந்த பார்வையாளனை ரசிகனாக மாற்றி மீண்டும் மீண்டும் திரையரங்கிற்கு வரவழைப்பதே அது அடைய முயலும் பாரிய வெற்றி.  இந்த வெற்றி பெறுவதற்காக அதன் படைப்பாக்கத்தில் எல்லா விதமான, சமரசங்களும், விமர்சனங்களும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.  சினிமாவின் மீதான எதிர்வினைகள்  அதன் படைப்பாளர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அவற்றில் பரிசீலனைக்கு தகுதியான பெரும்பாலானவைகளில்  தேர்ந்தெடுக்பபட்ட சிலவற்றை அடுத்தடுத்த படைப்புகளில் அதே படைப்பாளி பிரதிபலிப்பது நிகழ்ந்திருக்கிறது.   ஒற்றை கூகுள் சுடுக்கலில்  ஒரு சினிமா படைப்பாளி அவனின் படைப்பைப் பற்றி எல்லாவிதமான எதிர்வினைகளையும் அறிந்து கொள்ளும் வசதி  இந்த சூழலில் இருக்கிறது. விளம்பரப் பதாகைகளை ஏந்தி சினிமாவில் இடம்பெறும் ககனவுகளுடன் இயங்கும் பலர் யூடூப்பிலும், பத்திரிக்கைகளிலும் விமர்சனம் செய்கிறார்கள்.  இவர்களுக்கு சினிமாவை படைப்பாளன் கோணத்தில் அணுகி பார்வையாளனுக்கு விளக்குவதா?  இல்லை பார்வையாளன் கோணத்தில் படைப்பை அணுகுவதா என்கிற பெர

மதுரையும் கேளிக்கை சினிமாவும்

படம்
நடிகர் குரு சோமசுந்தரம் ஒரு பேட்டியில்,  மதுரை நகருக்குள்,  80 திரையரங்குகள் இருந்ததாக ஒரு தகவலைச் சொல்கிறார். எட்டு கிலோ மீட்டர் சுற்றளவுள்ள ஒரு நகருக்கு இது ஆச்சரியமான எண்ணிக்கை என முதலில் தோன்றும்.  செயற்கைக்கோள் ஒளியலை வரிசைகளின்  அதீத வளர்ச்சிக்கும், அகன்றும் நீண்டும் கொண்டே இருக்கும் தட்டையான தொலைக்காட்சி தொழில்நுட்பத்திற்கும்,   முன்னரான காலம் அது. அன்று  மதுரையில் உயிர்ப்புடன்  தொடர்ந்து திரையிட்டபடி  இருந்த அரங்குகளின் கணக்குதான், குரு சோமசுந்தரம் கூறியது  வெளியூர்க்காரர்கள் பார்வையில் மதுரை ஒரு கோயில் நகரம். ஆனால் உண்மையில்  மதத்திற்கு நிகராக, கேளிக்கை சினிமா என்னும் ஊடகத்தை  மக்கள் தொடர்ந்து ஆராதித்து வருகிற நகரம் மதுரை.  வேறெந்த பொழுதுபோக்கிற்கும்  இடமில்லாமல், இருந்தாலும் அதற்கு மனமில்லாமல், அரங்குகளில் மட்டுமே மக்கள் அன்று  கேளிக்கை சினிமாக்களை கண்டு  களித்தனர்.  அரங்கிற்கு வெளியேயான வாழ்க்கையில் கூட அந்த கனவுலகின்   அறிதுயிலில் வாழ்ந்து வரும் ஒரு நகரத்திற்கு 80 அரங்குகள் என்பது பொருத்தமான எண்ணிக்கை கணக்குதான்.  வைகைக்கு தென் மேற்கு கரைக்கு அருகில் இருந்த திரையரங்குகளான 

தெருக்களே பள்ளிக்கூடம் - ராகுல் ஆல்வாரிஸ் - மொழியாக்கம் சுசீல்குமார்

படம்
நமது சூழலில், ஓரளவு லட்சியத்துடன் இருப்பதாக கருதப்படும், ஒரு பதின்ம வயது இளைஞன் ஒருவன் என்ன செய்வான்? ஒரு சாரார், நல்ல ஊதியம் பெற்று செட்டிலாக வாய்ப்புள்ள தொழில்த் துறையினை தேர்ந்தெடுத்து, அதற்காக பயற்சி வகுப்புகளில் முன்னரே சேரும் வழிகளை ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். அடுத்த சாரார், மேன்மையான துறைகளாக கருதப்படும் திரைத்துறை, கிரிக்கெட் போன்ற புகழ் அதிகம் கிடைக்கும் துறைக்கான கனவில் இருப்பார்கள். அந்த வாசலை நோக்கிய பயணத்தில் ஏதேனும் ஒரு அடி எடுத்திருப்பார்கள். பதினாறு வயதில் எனக்கு, எந்த ஒரு தெளிவான லட்சியமோ கனவோ இருந்ததாக நினைவில்லை. பத்தாவது பொதுத்தேர்வுக்குப் பிறகான அந்த வருடம், எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் ஒரே ஒரு இளைப்பாறும் வருடம் எனத் தோன்றியிருக்கிறது. புதிதாக வீட்டில் வாங்கிய வண்ணத் தொலைக்காட்சியில், கிரிக்கெட்டில் வீசி அடிக்கப்பட்ட அத்தனை பந்துகளையும் முழு நேரமாக பார்த்து பொழுதை கழித்துக் கடந்தேன். கேப்டன் பொறுப்பினைத் துறந்து புத்துணர்வு பெற்ற சச்சின் டெண்டுல்கர் அடி அடி என்று அடித்த அந்த 1998 வருடம். அதன் பயன்மதிப்பானது, இந்தப் பத்தியில் பதிவதைத் தாண்டி எதுவுமில

ம. நவீனின் பேய்ச்சி வாசிப்பனுபவம்

படம்
மதுரை அருகே திருப்புவனத்தில், வைகையின் வடகரையில் அமைந்திருக்கும் மடப்புரம் காளியம்மன் கோவில், சிறு வயதில் ஒரு சிலமுறை சென்று வழிபட்ட இடம். வெட்டவெளியில் வெள்ளைக் குதிரையின் உயர்ந்த முன்பாதங்களுக்கு கீழ் பூதங்களுக்கிடையில் உக்கிர தோற்றம் கொண்ட துடியான தெய்வம் காளி. அங்கு செல்லும் வாய்ப்பினை ஏதாவது காரணம் சொல்லி தவிர்க்கும் நான், ரிஷிவர்தன் பிறப்பதற்கு நேர்ந்திருந்த வேண்டுதலின் கட்டாயத்தால் 20 வருடம் கழித்து மீண்டும் சென்றிருந்தேன். தற்போது தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டடிருந்தது. புதியதாக சுற்று மதில்களும், கோயில் முற்றத்தில் செயற்கை கூரையும் அந்த சூழலின் முன்பிருந்த வெயிலின் தீவிரத்தினை குறைத்திருந்தன. ஆடு கோழி பலி கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், முன்பு என் நினைவு நாசியில் வியாபித்திருந்த குருதிவாடை அப்போது இல்லை.  எட்ட நின்று வழிபட்டுக்கொண்டிருந்த போது, செந்நாயுருவியின் நிறத்தில் சேலை அணிந்திருந்த வறிய கிராமத்து பெண் ஒருவர் தன் குழந்தைகளுடன் வந்தார். அவர் நெரிசலான கூட்டத்தினிடையில் தன்னை பொருத்திக்கொண்டு, பெருந்தில

ஊட்டி 2019 - குருநித்யா கருத்தரங்கு

படம்
ஊட்டி விவாத நிகழ்வுகளுக்குச் செல்லும் பேருந்துப் பயணங்களில், மலையேறத் துவங்கும்முன்  காலைநேரத்தில் எழுந்துவிடுவேன். மலைவெளி விரித்த பச்சை அழகினை தவறவே விடாமல், பார்த்துச் செல்வது கடந்த  சில வருடங்களாக எனது வழக்கம் . ஆனால் இந்த முறை அலுவலகத்தில் பாதியில் விட்டு வந்ததால் பின்தொடர்ந்த ஒரு வேலையின் நினைவுச் சுமையுடன் பேருந்து ஏற நேர்ந்தது.  பெருங்களத்தூர் விலக்கில், ஒளி கக்கிய பாதரச விளக்கு கம்பத்தின் அருகில் நின்ற பேருந்தில் ஏறியவுடன் தூங்கியவன் , ஊட்டி பேருந்து நிலையத்தில்தான் எழுந்தேன்..  ்பெர்ன்ஹில் செல்லும் பாதை நன்கு அறிமுகமாகி இருந்ததால் மூன்று சக்கர குலுங்குந்து பிடித்து குருகுலம் வந்து சேர்ந்தேன். 2018 ஊட்டி இலக்கிய முகாமிற்கு கரம்சோவ் சகோதரர்கள் உரைக்கான தயாரிப்பினைத் தவிர மற்ற எந்த படைப்பையும் வாசிக்கவில்லை என்ற குறை இருந்தது.  சுனீல் கிருஷ்ணன் ரிப்பன் கத்தரித்து துவங்கிய 1000 மணிநேர வாசிப்பு மாரத்தான் ஓட்டத்தின் புண்ணியத்தினால், இந்த முறை விவாதத்திற்காக தேர்ந்தெடுத்த சிறுகதை, கவிதை, அறிபுனைக்கதைகள் என அனைத்து படைப்புகளையும் குறைந்தபட்சம் ஒருமுறை வாசித்த மனநிறைவில் இருந்தேன். பய